டெல் அவில்: காசாவில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு மாற்றாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸும், இஸ்ரேலும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி கொள்கின்றனர்.