காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்ற நோக்கில் இஸ்ரேல் தனது ‘ஆக்கிரமிப்பு’ நடவடிக்கையை அரங்கேற்றவும் தொடங்கிவிட்டது. இஸ்ரேலின் நடவடிக்கை, காசாவின் நிலை, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு, உள்நாட்டில் நிலவும் ஆதரவு, எதிர்ப்பு ஆகியனவற்றை தெளிவாகப் பார்ப்போம்.