ஜெருசலேம்: சமீபத்திய காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்பு முதல் முறையாக 12-க்கும் அதிகமான ஹிஸ்புல்லாகளின் ஏவுகணைகளையும், ஒரு கட்டளை மையத்தையும் ராக்கெட் வீசித் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்தது. தெற்கு லெபனானில் இருந்து தங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
முன்னதாக, தீவிரவாத இலக்குகளுக்கு எதிராக வலிமையுடன் செயல்படுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு கட்டளையிட்டதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இஸ்ரேல் இரணுவம் கூறுகையில், சனிக்கிழமை காலையில் வடக்கு இஸ்ரேல் நகரமான மெதுலாவில் மூன்று ராக்கெட்டுகள் இடைமறித்து தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.