சென்னை: ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரில், காசா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு மரணத்துக்கான ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது என்று ப. சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (18-3-2025) அன்று இஸ்ரேல் படைகள் தொடங்கிய தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உட்பட குறைந்தது 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 678 பேர் காயமடைந்துள்ளனர்.