ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள், மான்களால் 1.15 லட்சம் ஏக்கர் புன்செய் நிலங்களில் முற்றிலும் விவசாய சாகுபடி நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 3.40 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் விவசாயமும், 12 ஏக்கரில் சிறுதானியங்கள், 8 ஆயிரம் ஏக்கரில் பயறு வகைகள், 30 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், மல்லி, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் பயரிடப் படுகின்றன. இங்கு பருவ நிலைகளால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால், செய்த விவசாயத்தை மான்களும், காட்டுப்பன்றிகளும், காட்டு மாடுகளும் அழித்து நாசம் செய்கின்றன.