புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் போட்டியை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.