நெல்லை / திருச்சி: “காமராஜர் குறித்த பேச்சை திமுக எம்.பி திருச்சி சிவா திரும்பப் பெற்று, தார்மிக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நெல்லை எம்.பி.ராபர்ட் புரூஸ் வலியுறுத்தினார்.
பாளையங்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ் கூறும்போது, “காமராஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி.யின் பேச்சு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும். திருச்சி சிவா தனது பேச்சை திரும்ப பெறுவதுடன் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது கருத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக மாநில தலைமை முடிவு செய்யும்” என்றார்.