லண்டன்: இந்திய அணி உடன் நாளை ஓவல் மைதானத்தில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை இந்த தொடரின் கடைசி போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும்.