கார்த்தி இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பண்ண முடியாது என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அப்படம் வெளியாகும் போது கொண்டாடப்படவில்லை. ஆனால், சமீபத்திய சில வருடங்களாக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இதன் 2-ம் பாகம் குறித்து செல்வராகவனிடம் அனைத்து பேட்டிகளிலும் கேட்கப்பட்டு வருகிறது.