தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக கற்பக விருட்சமான பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. பனை மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. தமிழ்நாட்டில் பனைமரங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இந்நிலை யில் தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மின் நிலையங்கள், மின்பாதைகள் அமைக்கவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வும் பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.