புதுடெல்லி: கூட்ட நெரிசல், குறைவான வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ரயில் பயணிகள் மிகவும் அவதிப்படுவதாகவும், இப்பிரச்சினைகளுக்கு ரயில்வே அமைச்சகம் தீர்வு காண வேண்டும் என்றும் மாநிலங்களவையில் எம்பிக்கள் வலியுறுத்தினர்.
ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடு குறித்த விவாதம் மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் உறுப்பினர் ஃபௌசியா கான், "ரயில்களில் மக்கள் ‘கால்நடைகளைப் போல’ பயணிக்கின்றனர். கூட்ட நெரிசல் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.