சென்னை: சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவுடிகளை ஒழிக்க பிரத்யேக நடவடிக்கை எடுப்பதால் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடரப்படுகிறது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வேறொரு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பு மூலம் மட்டுமே பொய் வழக்கா அல்லது உண்மையான வழக்கா என அறிய முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post காவல் ஆணையருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.