புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு கூட்டணியில் இருந்து 2 அமைப்புகள் விலகி உள்ளன. இது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், பிரிவினைவாத அமைப்புகள் இணைந்தன.