கத்துவா: ஜம்மு – காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தததாக தகவல். மேலும் காவல்துறை டிஎஸ்பி உள்பட 7 போலீஸார் காயமடைந்ததாகத் தெரிகிறது. இந்த என்கவுன்ட்டரை காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நடத்தியுள்ளனர்.
இந்த என்கவுன்ட்டரில் காவல்துறை தரப்பிலான உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அது மறுக்கப்படவும் இல்லை. மாறாக என்கவுன்ட்டர் நிகழ்விடத்தை சோதனை செய்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.