ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேடுல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள சத்ரு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது.