தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது பல நிறுவனங்களின் படங்களுக்காக நடிகர்கள் தேர்வு என்று ஏமாற்றும் போக்கு திரையுலகில் அதிகரித்திருக்கிறது. இதில் ராஜ்கமல் நிறுவனம் சிக்கியிருக்கிறது. இதற்காக அறிக்கை ஒன்றை தங்களுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது ராஜ்கமல் நிறுவனம்.