மகா கும்பமேளாவில் கின்னர் அகாடாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலிட் நடிகை மம்தா குல்கர்னிக்கு அளிக்கப்பட்ட மகா மண்டலேஷ்வர் பதவிக்கு சிக்கல் உருவாகி விட்டது.
1990-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தவர் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. திரைத் துறையிலிருந்து விலகி துபாயில் வாழ்ந்து வந்த இவர், சுமார் 25 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பினார். பிரயாக்ராஜ் கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்டார். இவருக்கு திருநங்கைகளுக்கான கின்னர் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பதவியும் அளிக்கப்பட்டது.