குஜராத் அணியின் முன்னாள் கேப்டனும் அருமையான பேட்டருமான பிரியங்க் பஞ்ச்சலின் முதல் தர கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோர் 314 நாட் அவுட். 2008-ல் 18 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2015-ல் 35 வயதில் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு அறிவித்தார். ஏன் இந்த டி20 ஐபிஎல் பணமழை காலத்திலும் இப்படிப்பட்ட ஓய்வு என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது வாழ்க்கை கிரிக்கெட்டை விடவும் பெரியது என்று தத்துவார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.
இந்தியா ஏ அணியை வழிநடத்திய பிரியங்க் பஞ்ச்சல், இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் கடந்த மே மாதம் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.