புதுச்சேரி: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் இவ்வழக்கில் தொடர்புள்ள நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (70). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரியான இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி பல்வேறு தவணைகளில் ₹98 லட்சத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அசோகன் புகார் அளித்தார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து, மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2022ல் கோவையில் ஆஷ் பே எனும் பெயரில் நிறுவனம் தொடங்கியபோது, அதன் தொடக்க விழாவில் பிரபல நடிகைகள் பங்கேற்றதும், தொடர்ந்து 3 மாதங்களுக்குபின் மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் மற்ெறாரு பிரபல நடிகை மூலம் தங்களிடம் முதலீடு செய்த 100 பேருக்கு கார்களை பரிசாக வழங்கி அதிக முதலீட்டாளர்களை கவர்ந்ததும் தெரியவந்தது. ஆஷ் பே நிறுவனத்துக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இக்கும்பல் புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேரிடம் ₹3.60 கோடி மோசடி செய்துள்ளதோடு, டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ₹50 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்டு டிஸ்க், வங்கி கணக்கு குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி குறித்து சைபர்கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, ‘இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 10 பேரை தனிப்படை தேடி வருகிறது. மேலும் இந்த மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தி உள்ளனர். அதனால் மோசடிக்கும், இவர்களுக்கும் ெதாடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 2 நடிகைகளிடமும் விசாரணை நடத்த அவர்களுக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதனிடையே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வங்கியில் உள்ள பணம், மோசடியில் சம்பாதித்து பணம் எவ்வளவு, அதில் எவ்வளவு சொத்துக்கள் வாங்கப்பட்டது என்பது குறித்தும், அவர்களது உறவினர்களுக்கு மோசடி பணம் அனுப்பட்டுள்ளதாக என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
The post கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: நடிகைகள் தமன்னா காஜலிடம் விசாரிக்க முடிவு.! புதுச்சேரி போலீஸ் ஆலோசனை appeared first on Dinakaran.