கிருஷ்ணகிரி: கோடை வெயில் வாட்டும் நிலையில் பந்தல் அமைக்க தென்னங்கீற்றுக்கு வரவேற்பு அதிகரிப்பால் விலை உயர்வு புத்துயிர் பெறும் தொழிலால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி எஸ்.கே.ரமேஷ் கிருஷ்ணகிரி கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பந்தல் மற்றும் குடிசை, குடில் அமைக்க தென்னங்கீற்றுகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால், இத்தொழில் புத்துயிர் பெற்று வருவதால், போச்சம்பள்ளி பகுதி தென்னை சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள போச்சம்பள்ளி, சந்தூர், செல்லம்பட்டி, பேரூஅள்ளி, மருதேரி, அகரம், காவேரிப்பட்டணம், புலியூர், கோட்டப்பட்டி, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை மூலம் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.