தென்காசி மாவட்டத்தில் தக்காளிப் பழம் கிலோ ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது. ஆலங்குளம், கீழப்பாவூர், சுரண்டை, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, அகரக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தனர்.