சென்னை: கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது ஒன்றிய அரசுக்கு பொதுவாக உள்ளது. தமிழர் வரலாற்றை நிராகரிக்க காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது. கீழடியில் ஒன்றுமே இல்லை என்றனர்; பின்னர் ஆய்வதிகாரியை இடமாற்றினர். நிதியே ஒதுக்கமாட்டோம் என்றனர், கடைசியில் ஆய்வறிக்கையை 2 ஆண்டு கிடப்பில் போட்டனர் என அவர் தெரிவித்தார்.
The post கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி appeared first on Dinakaran.