கடந்த வாரம் தொடங்கிய 18-வது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் களைகட்டி வருகிறது. பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஏறத்தாழ பெரும்பாலான அணிகள் முதல் வெற்றியைப் பெற்று தங்களது கணக்கைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு அதிகமாக எதிர்பார்க்கப்படும் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை அணிக்கெதிராக முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் இருவருமே அணியில் வைரங்களாக ஜொலிக்கின்றனர். அணியின் வெற்றியில் இருவருமே அதிக பங்கை சுமந்து அணியின் சொத்துகளாக மாறியுள்ளனர்.
கடந்த 17-வது ஆண்டு சீசனிலேயே கலக்கிய சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் இருவருமே இந்த ஆண்டின் முதல் 2 போட்டியிலும் தங்களது அபார முத்திரையைப் பதித்துள்ளனர்.