விழுப்புரம்: மரக்காணத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் மரக்காணம் வருவாய் துறையினர் ஹெலிகாப்டரில் பறந்தார்களா என்ற விவகாரம் குறித்து வட்டாட்சியர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தாசில்தார் பழனி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். ஆனால் இவ்விழாவில் கலந்துகொள்ளாமல் மரக்காணம் வடக்கு பகுதியில் மனைப்பிரிவுகள் அமைத்த நிறுவனம், ஹெலிகாப்டர் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து சென்றபோது சில வருவாய்துறையினர் உடன் சென்றனர் என புகார் எழுந்தது.