புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
73 வயதான தன்கர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நராங்க் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் (சிசியு) அனுதிக்கப்பட்டார்.