மதுரை: குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை காளிகாப்பானைச் சேர்ந்த எம்.சவுந்தரபாண்டி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காளிகாப்பான் குட்லக் அவென்யூ குடியிருப்பு பகுதியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 16.12.2024-ல் முதுமையால் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தியின் உடல் என் வீடு அருகே அடக்கம் செய்யப்பட்டது.