சென்னை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை தேர்வு செய்யாதது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘இதில் அவரது தவறு எதுவும் இல்லை. இப்போதைக்கு வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டி உள்ளது’ என ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்யாதது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.