குன்னூரில் தொடரும் கன மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு தொடர்கிறது. குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ மழை பதிவானது.