வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. வனப்பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளால் வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
இதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் காப்பு காடு பகுதிகள் உள்ளன. இங்கு மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, மயில், நரி, ஓநாய், உடும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.