சென்னை: சென்னை கொடுங்கையூர், கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ நா.ராமகிருஷ்ணன் பேசுகையில், “கம்பம் நகராட்சியில் திடக்கழிவில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விலையின்றி வழங்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.