வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் பாலாறு பகுதிகளில் கொட்டி தீயிட்டு எரிக்கப்படுவதால் பாலாறு தனது அடையாளத்தை மெல்ல, மெல்ல இழந்து வருகிறது. பாலாற்றை மீட்டெடுக்க தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கி.மீ., தொலைவு பயணித்து, அங்கிருந்து ஆந்திர மாநிலத்தில் நுழைந்து அங்கு 33 கி.மீ., தொலைவுக்கு பயணிக்கும் பாலாறு தமிழகத்தில் 222 கி.மீ., தொலைவுக்கு பயணித்து வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஜீவநதியாக விளங்கி வயலூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.