ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அடுத்தபடியாக சென்னை மாகாணப் பிரதமராக (முதல்வராக) யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடையே விவாதங்கள் நடைபெற்றன. பலரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டன.
பக்தவத்சலத்தைப் பிரதமராக (முதல்வராக) ஆக்க வேண்டும் என்று காமராஜரின் முடிவாக இருந்தது. அவ்வாறு பதவி ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பக்தவத்சலத்திடமும் காமராஜர் தெரிவித்துவிட்டார். யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்ற அமைச்சர்கள் பட்டியல் கூட தயாரிக்கப்பட்டு விட்டது.