விழுப்புரம்: உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பே கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள், நானும் சென்னைக்குச் சென்றேன். ஆனால், பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. எந்த முடிவும் ஏற்படவில்லை.