அனைத்து ஜாப் ஆர்டர்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்க வேண்டும் என மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ‘லகு உத்யோக் பாரதி’ தமிழ்நாடு தலைவர் சிவக்குமார், மாநில பொதுச்செயலாளர் வீரசெழியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் மாதம் நடந்த நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ‘லகு உத்யோக் பாரதி’ சார்பில், அகில இந்திய பொதுச் செயலாளர் ஓம் பிரகாஷ் குப்தா மற்றும் அகில இந்திய இணைப் பொருளாளர் மகேஷ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் கூறியதாவது: