அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீரமைப்புக்காக ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், 2024-25-ம் ஆண்டுக்கு கிராமப்புறங்களில் பல்வேறு பணிகளுக்காக மாநில அரசின் நிதி ரூ.250 கோடி உட்பட ரூ.1,147.28 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு பிப்.26-ம் தேதி விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, கடந்தாண்டு ஜூலை மாதம், மாநில அரசின் திட்ட நிதியில் இருந்து ஒரு பகுதி அதாவது ரூ.62.50 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் அடுத்தகட்டமாக ரூ.62.50 கோடியும், நவம்பர் மாதம் ரூ.62.50 கோடியும் ஒதுக்கப்பட்டது.