ஹர்சில்(உத்தராகண்ட்): குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் துறையினர், திரைப்படத்துறையினர், இளைஞர்கள் உள்ளிட்டோர் இங்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் எனக் கூறினார்.
உத்தராகண்டில் உள்ள உத்தரகாசிக்கு ஒரு நாள் பயணமாக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹர்சிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “மனாவில் சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கங்கை தாயின் குளிர்கால தங்குமிடமான முக்வாவில் எனது சொந்த மக்களோடு இருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன்.