ஐபிஎல் 2025 தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின, ஹை ஸ்கோரிங் மேட்ச் ஆன இந்தப் போட்டி விறுவிறுப்பான கிளைமாக்ஸில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் பின்னடைவு காண பஞ்சாப் கிங்ஸின் அபார வெற்றியில் முடிந்தது.
இந்தப் போட்டியில் அணித்தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணித்தேர்வில் இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்வு செய்யாமல் விட்டது நம் ரசிகர்களை மட்டுமல்ல, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.