கூடலூர் வனப் பகுதிகளில் யானைகள் ஊருக்குள் ஊடுருவாமல் இருக்க அதிநவீன தெர்மல் கேமரா ட்ரோன்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இதனால் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறும் போது ஒலி எழுப்பும் வகையில் எச்சரிக்கை ஒலி அமைப்புகளை வனத்துறையினர் நிறுவியுள்ளனர்.