டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில், கூடுதல் டிக்கெட் விற்பனை செய்தது ஏன்? என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். பிரயாக்ராஜ் வழியாக செல்லும் இரு ரயில்களில் , மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தர்கள் ஏற முயன்றபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது 2 மணி நேரத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பயண சீட்டுகள் டெல்லி ரயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சோக சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ரயில்வே சட்டத்தை மீறும் பயணிகளுக்கு விதிமுறைகள் படி ரூ.1,000 அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதிப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.