சென்னை: கூட்டணி அமைப்பதில் அதிமுகவுக்கு இவ்வளவு அவசரம் ஏன்? என கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், துணை பொதுச்செயலாளர்கள் நித்யானந்தன், ஏ.கே.பி.சின்ராஜ், வி.மாதேஸ்வரன் எம்.பி., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.