புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லியில் நேற்று முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர்.
அமித் ஷாவுடனான சந்திப்பில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, மாநிலங்களவை எம்.பி.க்கள் டாக்டர் எம்.தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.