ஓட்டுக்கு பணம் கொடுத்த காலம் போய் இப்போது பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்கவே குலுக்கலில் பரிசு திட்டத்தை அறிவித்து புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்கள் அதிமுக-காரர்கள். மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை விழாவாக கொண்டாடி வருகிறார்கள் அதிமுக-காரர்கள். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியிலும் இன்று (மார்ச் 5) ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.சி.கருப்பணன், அதிமுக அமைப்புச் செயலாளர் சி.தாமோதரன், பெருந்துறை எம்எல்ஏ-வான ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்துக்கு ஆள் திரட்டத்தான் ‘பரிசுக் குலுக்கல்’ என்ற வித்தியாசமான ஐடியாவைக் கையாண்டிருக்கிறார்கள்.