கொல்கத்தா: வக்பு (திருத்தம்) சட்டம் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தை நிறைவேற்ற ஏன் இந்த அவசரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்குவங்கத்தில் இன்று நடந்த இமாம்களுடனான சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, “வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு அவசரம் என்று நான் மத்திய அரசிடம் கேட்க விரும்புகிறேன். மேற்குவங்கத்தின் நிலைமை மத்திய அரசுக்குத் தெரியாதா? மேற்கு வங்கம் அதன் எல்லைகளை வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது.