திருப்பத்தூர்: ‘தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை நடத்துவதில் திமுகவுக்கு எந்தவித அச்சமும் இல்லை’ என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியைப் படிக்கவில்லை என்றால் யாசகம் எடுக்கக்கூட முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தி படித்தவர்கள், இந்தி தெரிந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்.