புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் 13 மற்றும் 14வது நடைமேடைகளில் உள்ள ரயில்களின் தாமதத்தால் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் 12வது நடைமேடையில் அளவுக்கு அதிகமாக குவிந்துள்ளனர்.
பிரயாக்ராஜ் செல்லும் ரயில் 16வது நடைமேடைக்கு வரும் என்று கடைசி நேரத்தில் வெளியான அறிவிப்பால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு, ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்துள்ள 13, 14வது நடைமேடைகளைக் கடந்து சென்றபோது பெரும் குழப்பம் ஏற்பட்டு உயிர்ச்சேதத்திற்கு வழிவகுத்துள்ளது.