ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான வீரர்களில் ஒருவராக தோனி விளங்குகிறார். அண்மையில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ‘கேப்டன் கூல்’ பெயருக்கு அவர் டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளார். இது அவரது ஆளுமையுடன் தொடர்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.