சென்னை: அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கேப்டன் பொறுப்புக்கு பும்ராவை ஆதரித்துள்ளார் அஸ்வின்.
“இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள அணியில் இடம்பெறுகின்ற அனுபவ வீரர்களில் ஒருவராக பும்ரா இருப்பார். அவர் அணியின் கேப்டன்சி ஆப்ஷனிலும் நிச்சயம் இருப்பார். கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால், தேர்வு குழுவினர் அவரது உடற்திறனை கருத்தில் கொண்டு அது தொடர்பாக முடிவு செய்யும் என தெரிகிறது” என அஸ்வின் கூறியுள்ளார்.