
சென்னை: தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நிலையில், கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தவில்லை என்றும் ஒருமுறை கேரளாவுக்கு செல்வதற்கான தற்காலிக அனுமதியைப் பெற்று பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறி கொச்சியில், 30 ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மொத்தம் ரூ.70 லட்சம் வரை நேற்று முன்தினம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

