புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது: "அமெரிக்காவில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட போது கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது ஒரு இந்தியனாக மிகவும் வேதனையாக இருந்தது.