தமிழகத்தில் விவசாயம் பிரதானமாக இருந்ததால் பாசன வசதி மற்றும் நீர் மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா மின் திட்டம் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் மின் தேவையில் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்படுகிறது.
பைக்காரா மின் திட்டத்தை நிறைவேற்ற திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர் பெருமுயற்சி எடுத்தார். நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்தை அந்தக் காலத்திலேயே முன்வைத்தார். நாட்டில் ஒரு பக்கம் மழைவெள்ளம், மறுபுறம் வறட்சி போன்ற நிலைகளை மாற்றி சமநிலை ஏற்பட நதிநீர் இணைப்பு மிகவும் அவசியம் என்று தனது கருத்தை வலியுறுத்தினார்.